Thursday, February 17, 2011

முன்னேற்ற பாதையில் இந்தியா

சோனியா, கல்மாடி, கருணாநிதி, ஜெயலலிதா, அழகிரி ,மாயாவதி,சிபுசோரன், லல்லு உள்ளிட்ட அணைத்து முன்னாள் இந்நாள் மாண்புமிகுக்கள் அரசியலில் இருந்து நிரந்தர ஓய்வு.

மனித நேயம் மிக்க, நேர்மையான படித்தவர்கள் மத்தியிலும், மாநிலத்திலும் நாடாள தேர்வு.

பாஜக , முஸ்லிம்லீக், பாமக உள்ளிட்ட அனைத்து மத மற்றும் ஜாதி கட்சிகள் களைப்பு.

காஷ்மீர் இந்தியாவினுடயதே பாகிஸ்தான் திட்ட வட்ட அறிவிப்பு

இலங்கை தமிழ் மக்களும் முதல் தர குடிமக்களே.இனிமேல் அவர்களும் சிங்களவர்களை போல் வாழலாம்.இலங்கை அறிவிப்பு

இந்திய மீனவர்கள் எங்கள் மீனவர்களுடன் சேர்ந்து மீன் வளத்தை பெருக்கலாம் இலங்கை அறிவிப்பு

அனைத்து கருப்பு பணமும் இந்தியா வந்து அடைந்தது. தனி நபர் வருமானத்தில் இந்தியா உலகில் முதல் 10 இடத்திற்குள் வந்தது.

2G உள்ளிட்ட அனைத்து ஊழல் பணமும் அரசிடம் ஒப்படைப்பு.

கையூட்டு கொடுக்க மாட்டோம் பெற மாட்டோம் என அனைத்து இந்திய பொது மக்களும் முடிவு

இன்னும் 5 வருடத்தில் இந்தியா முதல் நாடாக வந்துவிடும் சீனா அமெரிக்கா பெருமிதம்.

சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக்க பட்டன


அனைத்து கோவில்களிலும் அனைத்து மதத்தினரும் வழி படலாம்.


1 comment:

  1. கனவுகள் நிஜங்களாகட்டும்... வாழ்த்துக்கள்

    ReplyDelete